ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லாதது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் உடல்நிலை பற்றி அமைச்சர்கள் கவலைப்படவில்லை. ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்காத அமைச்சர்கள் தற்போது மாற்றி மாற்றி பேசுவது மோசடியானது. தொற்று ஏற்பட்டுவிடும் எனக் கூறி மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவை, சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை. ஜெயலலிதாவும் தனது உடல்நிலையை கவனித்துக் கொள்ளாதது கவலைக்குரியது” என்றார்.
செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த முதல் மருத்துவ அறிக்கையை புதிய தலைமுறை வெளியிட்டது. இதுதொடர்பான விவாதத்தில் பேசிய திருநாவுக்கரசர் இதனை தெரிவித்தார்.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?