Published : 02,Feb 2023 12:45 PM

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்

Sami-Darshan-with-Soundarya-Rajinikanth-family-at-Tiruchendur-Murugan-Temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்-ன் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

image

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, தனது கணவர் விசாகன் மற்றும் குழந்தைகயுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு சண்முக விலாசத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி, தட்சணாமூர்த்தி ஆகிய சன்னதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்