எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாற்றம் இந்தியா நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாத போதும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. பள்ளி சாரா நிகழ்ச்சிகளில் பங்கேற்க குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டுமென்றால், அதற்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும் இடைக்கால கோரிக்கையாக, சேலத்தில் வரும் 30-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் 2 வாரத்திற்குள் பதில் மனுத்தாக்கல் செய்வும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்