ஆஃப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மேட்டிஸ் சந்தித்து பேசினார். போர் விமானங்கள் வாங்குவது உள்ளிட்டவை குறித்து மேட்டிஸ் உடன் விவாதிக்கப்பட்டது. அப்போது ஆஃப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என நிர்மலா சீதாராமன் கூறியதாக தெரிகிறது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பின் அந்நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியாக உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் மேட்டிஸின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!