ஆஃப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மேட்டிஸ் சந்தித்து பேசினார். போர் விமானங்கள் வாங்குவது உள்ளிட்டவை குறித்து மேட்டிஸ் உடன் விவாதிக்கப்பட்டது. அப்போது ஆஃப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என நிர்மலா சீதாராமன் கூறியதாக தெரிகிறது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பின் அந்நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியாக உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் மேட்டிஸின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'