தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்: பாகிஸ்தானுக்கு பிபின் ராவத் எச்சரிக்கை!

தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்: பாகிஸ்தானுக்கு பிபின் ராவத் எச்சரிக்கை!
தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்: பாகிஸ்தானுக்கு பிபின் ராவத் எச்சரிக்கை!

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் எல்லை தாண்டி பயங்கரவாதிகள் ஊடுருவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அவ்வாறு ஊடுருபவர்களை வரவேற்று அவர்களது சமாதிகளுக்கு அனுப்பி வைக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் அவை மீண்டும் நடத்தப்படலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்” என்று ராவத் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com