ஒருதலை காதலால் விபரீதம் - ஓடும் ரயில்முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொன்ற இளைஞர்

ஒருதலை காதலால் விபரீதம் - ஓடும் ரயில்முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொன்ற இளைஞர்
ஒருதலை காதலால் விபரீதம் - ஓடும் ரயில்முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொன்ற இளைஞர்

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23). அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா(20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷ், சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சத்யா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ரயில் வரும் நேரம் பார்த்து சதீஷ் சத்யாவை ரயில்முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தற்போது வரை கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்கள், இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்டதாகவும் கூறுகின்றன. அங்கிருந்து தப்பியோடிய சதீஷை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும், உயிரிழந்த சத்யாவின் பெற்றோர் யார்? அவர் ஆதம்பாக்கத்தில் எங்கு வசித்து வருகிறார் என்பது போன்ற தகவல்களை அறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இருவரும் காதலித்து வந்தனரா? அல்லது ஒருதலை காதலால் சதீஷ் இந்த செயலில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வழக்கமான ரயில்வே போலீசார் தவிர, பிற போலீசாரும் வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com