புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் 2017-ம் ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் பி.ஆர்.பாபு, மற்றும் சென்டாக் தலைவர் நரேந்திரகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், சென்டாக் கன்வீனர் வி.கோவிந்தராஜ், இணை கன்வீனர் வி.பஜனிராஜ்ஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனதன் டேனியல் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர்கள், பதிவாளர் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டினால் 96 தகுதியான மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைக்கவில்லை எனவும், அவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி அளித்த சென்டாக் அதிகாரிகள், அவர்களுக்கு இடம் கிடைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, சென்டாக் பரிந்துரைத்த மாணவர்களை சேர்க்காமல் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேறு மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் சேர்த்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?