17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி!
17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2005ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஏழு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும். அதற்காக இங்கிலாந்து அணி நேற்று பாகிஸ்தான் போய் சேர்ந்தது.

கடைசியாக 2005-ம் ஆண்டில் அங்கு ஆடிய இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆடிவிட்டு நாடு திரும்பியது. அதன் பிறகு பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு அச்சம் காரணமாக பாகிஸ்தான் செல்வதை தவிர்த்தது. கடந்த ஆண்டு கூட பாதுகாப்பு பிரச்சினை எதிரொலியாக கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணி பயணத்தை ரத்து செய்தது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது.

கராச்சியில் வந்திறங்கிய இங்கிலாந்து வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். போட்டி நடக்கும் நாட்களில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து ஸ்டேடியம் வரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அந்த பகுதி ஆயுதப்படை போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். வீரர்களின் பயணத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

டி20 தொடரை முடித்துக் கொண்டு தாயகம் செல்லும் இங்கிலாந்து அணி அதன் பின்னர் டிசம்பர் மாதம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இதையும் படிக்க: சின்ன வித்தியாசம்தான்.. பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் தரமான சம்பவம்! #T20WC2007

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com