ஜெயலலிதாவிடம் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டு தான் கைரேகை வாங்கப்பட்டது என அப்போலோ மருத்துவ குழு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் வழங்குவது தொடர்பான அங்கீகார கடிதத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக அவரது இடது கை பெருவிரலின் ரேகை பதியப்பட்டு இருந்தது. இந்த ரேகை, ஜெயலலிதாவினுடையதா என்ற சந்தேகம் இருப்பதாக வதந்தி பரவியது.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மருத்துவ குழுவினர்கள்
ஜெயலலிதாவின் கையில் டிரிப் ஏற்றி, கை வீக்கத்துடன் இருந்ததால் கையெழுத்து வாங்க முடியவில்லை என்றும். தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டு கைரேகை பெறப்பட்டது என்று தெரிவித்தனர். அப்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாகவும் கைரேகை பெறும்போது டாக்டர்கள் பாலாஜி, பாபு ஆகியோர் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!