வரும் வெள்ளிக்கிழமை 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில வருடங்களாக அதிகமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு டிஜிட்டலின் வருகைதான் காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக, குறைந்த செலவில் படங்களை எடுத்துவிட முடிகிறது. ஆனால், ரிலீஸ் செய்வதில்தான் சிக்கல். சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (22-ம் தேதி) அன்று 11 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
’பயமா இருக்கு, நெறி, நான் ஆணையிட்டால், ஆயிரத்தில் இருவர், போலீஸ் ராஜ்ஜியம், வல்லதேசம், களவுத் தொழிற்சாலை, தெரு நாய்கள், கொஞ்சம் கொஞ்சம், பிச்சுவா கத்தி, காக்கா ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் சில படங்களின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றி அமைக்கப்படலாம்’ என்று வினியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி