தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பொறுப்பேற்க இருக்கிறார்.
அதிமுக நிறுவனரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, 1987ஆம் ஆண்டு அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 1991ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்ற பிறகு, தமிழகத்தின் இரண்டாவது பெண் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவரது மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ள சசிகலா, தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக இருப்பார்.
தமிழகத்தின் மூன்று பெண் முதலமைச்சர்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக காலம் முதல்வராக இருந்த பெருமை ஜெயலலிதாவை சேரும். இவர்கள் மூவரில் தேர்தலைச் சந்தித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தார். எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும், அதிமுக எம்.எல்.ஏ.க்களால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட வி.என்.ஜானகி, அடுத்த தேர்தலில் கண்ட தோல்வியால், ஒருங்கிணைந்த அதிமுக ஏற்பட வழிவிட்டு விலகிக் கொண்டார். இப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களால் முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இனிமேல்தான் தேர்தலை சந்திக்க உள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!