இர்மா புயலால் பாதிக்கப்பட்ட ஃபுளோரிடா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சேதங்களை பார்வையிட்டார்.
ஃபுளோரிடாவை புரட்டிப் போட்ட இர்மா புயலால் அம்மாகாணத்தில் இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. சுமார் 30 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருளில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பார்வையிட்டார். தொடர்ந்து வாகனம் மூலம் சாலை வழியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட விர்ஜின் தீவுகளிலும், போர்ட்டோ ரிக்கோவிலும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அப்போது, புயலின் பாதிப்பை பார்த்த பிறகாவது பாரிஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்பாட்டை இனியாவது ஏற்றுக் கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் 1930 ஆம் காலக்கட்டத்திலும் கூட இதை விட மிகப் பெரிய புயல்கள் அமெரிக்காவை தாக்கி இருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம் என பதில் அளித்தார்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!