டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி

டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி
டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி

திருச்சி உழவர் சந்தைப் பகுதியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சி உழவர் சந்தைப் பகுதியில் செப்டம்பர் 16-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். ஆனால் இந்த பொதுக்கூட்டத்திற்கு, திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்தது.

எனவே, தினகரன் ஆதரவாளர் சீனிவாசன் என்பவர், திருச்சி உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி வழங்கக்கூடாது எனத் தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என மனுதாரர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, காவல்துறை பாதுகாப்புடன் டிடிவி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com