திமுக மாநிலங்களைவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதாக சூர்யா மீது திருச்சி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. மேலும், விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தை எடுத்துச் சென்றதாகவும் அதன் உரிமையாளர் புகார் அளித்திருந்திருக்கிறார்.
இந்தப் புகார்களின் அடிப்படையில், சூர்யாவை திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க... `அதிமுக ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?’- ஜெயக்குமார் பதில்
இவர், கடந்த மாதம் 8-ம் தேதிதான் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார். பாஜக-வில் இணைந்தபோது சூர்யா சிவா, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் அதில் இணைந்ததாகவும், திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதாலேயே அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்ததாகவும் கூறியிருந்தார்.
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix