டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி உரிமையாளருக்கு கர்நாடக காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் எனப்படும் குடகு மலைப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள அந்த விடுதிக்கு கர்நாடக மாநில சந்திக்குப்பம் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என காவல்துறையினர் அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பியுள்ளனர். 3 நாட்களுக்குள் உரிய பதிலளிக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விடுதி உரிமையாளரை கர்நாடக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றொரு மாநிலத்திற்கு சென்று தங்கினால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்த பகுதி காவல்நிலையத்தை சார்ந்தது என்பதால் அவர்கள் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதிக்குள் நேற்று நுழைந்த தமிழக காவல்துறையினர், பழனியப்பன் எம்எல்ஏ மீதான மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த சென்றதாகவும், ஆனால் பழனியப்பன் எம்எல்ஏ அங்கு இல்லாத காரணத்தினால் தமிழக போலீசார் திரும்பியதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் கர்நாடக காவல்துறையினர் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!