பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி தோல்வியடைந்தது.
பாப் டு பிளிசிஸ் தலைமையிலான உலக லெவன் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதலாவது போட்டி பலத்த பாதுகாப்புக்கு இடையே லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற உலக லெவன் அணி, பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 52 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய உலக லெவன் அணியால், 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் பிளிசிஸ், டேரன் சமி தலா 29 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி பற்றி உலக லெவன் அணி கேப்டன் பாப் டு பிளிசிஸ் கூறும்போது, ’இது சிறந்த போட்டியாக இருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் பந்துவீச்சில் அதிக வெரைட்டி இருந்தது’ என்றார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்