சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் முதன்முறையாக சென்னையில் சிலை கலைஞர் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்புக்குப்பின் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். அப்போது, ”கருணாநிதியின் சிலை நேரில் பேசுவது போல் உள்ளது. அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் தோட்டத்தில் தலைமை செயலகத்தை கட்டினார் கலைஞர். எனவே சிலை அமைக்க அந்த இடத்தை தேர்ந்தெடுத்தவர் முதல்வர் தான்.
அப்பனுக்கு தப்பாத பிள்ளை ஸ்டாலின். டெல்லியில் இருந்து கொண்டு வேட்டி சட்டை கட்டுபவர் குடியரசு துணைத்தலைவர். அதுவும் தமிழகத்தில் கட்டுவதுபோல் கட்டுவார். அதில் மற்றொருபவர் ப.சிதம்பரம். கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix