கால் உடைந்த நாய் குட்டியை 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தூக்கி சென்று கால்நடை மருத்துவமனையில், சிறுவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சின்ன சூண்டிப் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அணிஷ் மற்றும் மகேஷ். இவர்கள் இருவரும் பெண் நாட்டு நாய் குட்டி ஒன்றை பாசமாக வளர்த்த வருகிறார்கள். குட்டி நாய் கீழே குதிக்கும் போது அதன் கால் ஒன்று உடைந்திருக்கிறது. நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் கூடலூர் அல்லது பார்வுட் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் குட்டி நாய் வலியால் துடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுவர்களான சகோதரர்கள், சின்ன சூண்டி பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே நாய்க்குட்டியை தூக்கிச்சென்று பார்வுட் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு நாய் குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நாய் குட்டியின் கால் எலும்பு உடைந்து உள்ள நிலையில் அதற்கு மருத்துவர் கட்டுப் போட்டுள்ளார். பொதுவாக நாட்டு நாய்களை கண்டுகொள்ளாமல் விடும் ஒரு சிலர் மத்தியில் கால் உடைந்த நாய்க்குட்டியை, நடந்தே தூக்கிச் சென்று சிகிச்சை அளித்து பராமரித்து வரும் சகோதரர்கள் மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix