தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையத்தில் நடைபெற்று வருகிறது.
குரூப் 2 குரூப் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இதற்காக காலை 8.30 மணிக்கே மையத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் தேர்வு எழுத பலரும் ஆர்வம் காட்டினர். தமிழகம் முழுவதும் மொத்தம் 11,78,175 தேர்வு எழுதி வருகின்றனர். காலை 9 மணிக்கு பின் வந்தவர்களை தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் எழும்பூர், வண்ணாரப்பேட்டை மையத்தில் சிலர் உள்ளே அனுமதிக்காமல் காத்திருந்தனர்.
முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் இல்லை என்றாலும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து கொண்டு வந்தனர். அதேபோல் சென்னையில் மட்டும் 7 இடங்களில் 380 தேர்வு அறைகளில் சுமார் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவு ஜூன் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்