தருமபுரி அருகே கிரானைட் கம்பெனியில் பணியாற்றிய சக தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மேற்கு வங்க மாநில தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரியை அடுத்த மாரவாடி பகுதியில் கிரானைட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆதித்யா சவுத்திரி (32), சங்கர் பசுன்யா(25) ஆகிய இரண்டு மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதியன்று இரவு மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆதித்யா சவுத்திரி, பாபாயை சுத்தியலால் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பாபாய் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா அங்கிருந்து தலைமறைவானார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆதித்யா சவுத்ரியை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆதித்யா சவுத்ரி பெங்களூரில் உள்ள ஒரு கல் குவாரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, பெங்களூர் சென்ற தனிப்படை போலீஸார், ஆதித்ய சவுத்ரியை கைது செய்து தருமபுரி அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்