நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை, 25 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 3 ரூபாய் 90 காசுகளிருந்து ஒரே நாளில் 25 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 9ஆம்; தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில், கடந்த 9ஆமு தேதி 5 காசுகளும் 12 ஆம் தேதி 25 காசுகளும் விலை உயர்ந்து 3 ரூபாய் 90 காசுகளாக விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் 25 காசுகள் விலையை உயர்த்தி 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 3 நாட்களில் 50 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது...
வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து விலையும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் மீன்பிடித் தடை காலம் அமலில் உள்ளதால் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix