அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 12ஆம் தேதி நடைபெறும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் 12-ந் தேதி காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 11 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விதிமுறைபடி 5ல் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இருந்தாலே பொதுக்குழு கூட்டலாம். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டம் கூட்டப்படுகிறது. எல்லா பொதுக்குழு உறுப்பினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “பொதுக் குழு கூட்டம் கூட்டுவதில் எவ்வித விதிமீறலும் இல்லை. ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் உரிய நேரத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார். தன் கேள்விக்கு பதிலளிக்க முடியாதவர்கள் தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்