தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உரிமை ஏந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதில், இயக்குநர்கள் அமீருக்கும், பா.ரஞ்சித்திற்கும் இடையே முரண்பட்ட கருத்து ஏற்பட்டது. அதனால், சிறிது நேரம் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பாக சென்னை வடபழனியில் உரிமை ஏந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதில், ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை கூறி வந்த நிலையில், இயக்குநர் அமீர் சாதி, மத பேதங்களை மறந்து, கடந்து தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் என்ற வகையில் பேசினார். தமிழன் என்பதே பெருமை என்றும் அவர் கூறினார். அதனால், அதிருப்தியடைந்த இயக்குநர் பா.ரஞ்சித், அமீரிடமிருந்து மைக்கைப் பறித்து ஆவேசமாக பேசினார்.
சாதி வேறுபாடுகள் தமிழகத்தில் மலிந்துகிடக்கும் நிலையில், தமிழன் என்று பொதுவாகக் கூறி ஏமாற்றக் கூடாது என்றும், அனிதாவின் மரணத்தை வைத்தாவது நம்மை நாம் சுய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்றும் பா.ரஞ்சித் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேடையிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் அமீருக்கும், ரஞ்சித்திற்கும் ஆதரவாக குரல்கள் எழுந்ததால், இருவரையும் இயக்குநர் ராம் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
வேறுபாடுகளை ஒழித்து, ஒற்றை அடையாளத்தை நோக்கிய பயணத்தை இன்றைய சமூகம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அனிதாவிற்கான உரிமை ஏந்தல் கூட்டம் நிறைவுபெற்றது.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்