இந்தியாவில் கார் வாங்க ஆர்டர் கொடுத்து விட்டு ஏழரை லட்சம் வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் கார்கள் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப்ஸ் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கார்களில் உள்ள மின்னணு சாதனங்களுக்கு மூலப்பொருளாக உள்ள செமி கண்டக்டர் சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் முன்னணி நிறுவனங்கள் குறைந்த அளவே கார்களை உற்பத்தி செய்து வருகின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்திடம் 3 லட்சத்து 25 ஆயிரம் கார்களுக்கான ஆர்டர்கள் உள்ள நிலையில் அவற்றை விநியோகிப்பதில் தாமதம் நிலவுகிறது. சில வகை கார்களுக்கு 6 மாதம் வரை கூட காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனங்களிடம் 3.5 லட்சம் முதல் 3.75 லட்சம் வரை ஆர்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய கார் வாங்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பலரும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தை வேகம் பிடித்துள்ளது
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix