உத்தரப் பிரதேசத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லத்திற்கு அருகில் உள்ள ஹார்டுவேர் கடையில் கொள்ளையடித்த திருடன் சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் சா அண்டவுலியில் காவல் கண்காணிப்பாளர் ஒருவரின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஹார்டுவேர் கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவில் கடையை பூட்டி விட்டுச் சென்ற கடை உரிமையாளர் அன்ஷு சிங், மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த அனைத்து பணத்தையும் திருடன் எடுத்துச் சென்றதுடன், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
यूपी में अब चोर चोरी के बाद जश्न मना रहा है चंदौली में @chandaulipolice आपकी कोई ज़िम्मेदारी है क्या ? @adgzonelucknow pic.twitter.com/RTnNJdScEa
— Manoj KAKA (@ManojSinghKAKA) April 18, 2022Advertisement
காவல் நிலையத்தில் புகாரளித்த அன்ஷு சிங் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது திருடன் செய்த சேட்டைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். முகத்தை மூடிக் கொண்டு கடைக்குள் நுழையும் திருடன், தனக்கு வேண்டியதை திருடியுள்ளார். அதன் பின் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஒன்றை பார்த்தபோது திடீரென நடனமாடி விட்டு, பின் பதுங்கிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வரும் நிலையில், கொள்ளையடித்த திருடன் நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai