மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த நாடு தழுவிய "சமாஜிக் நய் பக்வாடா" (சமூக நீதிக்கான பதினைந்து நாட்கள்) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசாங்க திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, சத்தீஸ்கரில் மஹாசமுண்டிற்கு ஒரு நாள் பயணமாக சென்றார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெட்ரோல் விலையை குறைக்க மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி “பெட்ரோல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதே எங்களின் முயற்சி. எனவே கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசுகளையும் அதைச் செய்யச் சொன்னது. சத்தீஸ்கரில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 24 சதவீதமாக உள்ளது, அதை 10 சதவீதமாகக் குறைத்தால், பெட்ரோல் விலை தானாகவே குறையும். நுகர்வு அதிகரிக்கும் போது, 10 சதவீதம் (வாட்) கூட அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!