சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
சட்டப்பேரவைக்குள் புகையிலைப் பொருட்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.
குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பேரவைக்குள் எடுத்துவந்தனர். இது சட்டப்பேரவை மாண்புக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என ஆளும் அதிமுக குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவை உரிமை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், விளக்கமளிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டு திமுக உறுப்பினர்கள் நேற்று மனு கொடுத்தனர்.
இந்நிலையில் உரிமைக்குழு அனுப்பு நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
Loading More post
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'