விருதுநகர் பாலியல் வன்கொடுமை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் பாலியல் வன்கொடுமை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் பாலியல் வன்கொடுமை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் 21ஆம் தேதி 4 சிறார்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு இவ்வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜுனைத் அகமது ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய சிபிசிஐடி எஸ்.பி. உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.

அதன் பேரில், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் இருக்கும் 4பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com