ஆர்ப்பரிக்கும் கடலில் ஆபத்தை உணராமல் ஆர்வமுடன் புதுச்சேரி விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட பேனரை படகில் சென்று கட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விஜய் ரசிகர்கள் பிரமாண்ட பேனர்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பின் புறம் 200 மீட்டர் தூரத்தில் பிரெஞ்சு ஆட்சியர்களால் கப்பல் துறைமுக போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பாலம் நாளடைவில் இடிந்து அதன் தூண்கள் மட்டும் கடலின் நடுவே தெரியும் படி இருக்கும்.
சமீபகாலமாக அரசியல் கட்சியினர் மற்றும் பிரபல நடிகர்களின் பிறந்த நாளின்போது கடலில் தெரியும் இரும்பு தூண்களில் பேனர்களை கட்டி வருகின்றனர். இது ஆபத்தானது என்பதால் இந்த தூண்களில் பேனர்கள் கட்டக்கூடாது என்று போலீசார் அவ்வப்போது கடுமையாக எச்சரித்தும் வருகின்றனர்.
இருப்பினும் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் இருக்கும் நிலையிலும் ஆர்ப்பரிக்கும் கடலில் அச்சப்படாமலும், விபரீதத்தை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் பைபர் படகில் சென்ற விஜய் ரசிகர்கள் பீட்ஸ் பட பேனர்களை கட்டியுள்ளனர் மேலும் இதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai