மியான்மர் அதிபர் ஹைதின் கியாவுடனான சந்திப்பு சிறந்த முறையில் அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவைத் தொடர்ந்து அண்டை நாடான மியான்மருக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மியான்மரில் உள்ள நேப்பிதாவ் நகருக்கு சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் ஹதின் கியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, போதி மரத்தின் சிலையை, கியாவுக்கு பரிசாக மோடி வழங்கினார். பின்னர் இருவரும், இருதரப்பு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மியான்மர் நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சாங் சூச்சியை மோடி சந்திக்கிறார். ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக மியான்மரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix