இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெற இருக்கிறது.
இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வென்ற உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று, ஆறுதல் பெறும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகிறது.
இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. 20 ஓவர் போட்டியிலும் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் உள்ளது. பேட்டிங்கில் வீராட்கோலி, ரோகித்சர்மா, தோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா மிரட்டி வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி 20 ஓவர் போட்டியிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்துடன் இருக்கிறது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 6 போட்டிகளிலும், இலங்கை அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!