சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்த போலீசார் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தது. இதுதொடர்பான தொடர் புகாரின் பேரில் சீர்காழி சரக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில் அவர், சீர்காழி திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (22) என்பதும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து வாசுதேவனை கைது செய்த கொள்ளிடம் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடி மறைத்து வைத்திருந்த ஆறு இருசக்கர வாகனங்களை மீட்ட போலீசார், வாசுதேவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'