பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அங்கு நீண்டகாலமாக ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸையும், சிரோன்மணி அகாலி தளத்தையும் பின்னுக்கு தள்ளி, மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, ஆம் ஆத்மியின் பகவந்த் மான், பஞ்சாபின் புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த ஊரில் அவர் பதவியேற்றது பஞ்சாப் மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்" என அதில் மோடி கூறியுள்ளார்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix