பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. இதில் புதிதாக 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும், சில அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சிலரது இலாகாக்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. அதன்படி பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் சிங், அஷ்வினி குமார், கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் சிங், ஷிப் பிரதாப் சுக்லா ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த கே.ஜே. அல்ஃபோன்ஸ், டெல்லியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் ஆகியோர் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2014 மே 26ஆம் தேதி பதவியேற்றது. இதில் 23 கேபினட், 10 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 12 இணை அமைச்சர்கள் என 45 பேர் இருந்தனர். இதையடுத்து பல மத்திய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதால், தற்போது 72 பேர் என்ற எண்ணிக்கையுடன் மத்திய அமைச்சரவை உள்ளது. மக்களவையின் மொத்த எம்பிக்களான 545 பேரில் 15 சதவிகிதமான 81 பேர் வரை அமைச்சரவையில் இருக்க அனுமதி உள்ளது. ஆனால் தற்போதுள்ள அமைச்சரவையில் பல துறைகள் காலியாகவும், சில அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மனோகர் பரிக்கர் கோவா முதலமைச்சரானது, வெங்கய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவரானது மற்றும் அனில் மாதவ் தவே மரணம் உள்ளிட்ட காரணங்களால் காலியிடங்களும், சில அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் காலியான இடங்களை பூர்த்தி செய்யவும், கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளிக்கவுமே தற்போது மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படுகிறது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!