உக்ரைன் ரைவ்னே நகருக்கு வெளியே தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ரைவ்னே நகருக்கு வெளியே அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டோபில் கிராமத்தில் இடிபாடுகளிடையில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கூறியுள்ளார். தொலைக்காட்சி கோபுரம் மீது இரண்டு ஏவுகணைகள் அதிகாலை நேரத்தில் ஏவப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாவும் அவர் கூறினார்.
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 100 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 6 வாகனங்கள் சேதமடைந்ததாவும் உக்ரைன் படைகள் சார்பில் கூறப்படுகிறது. எனினும் இதை ரஷ்ய தரப்பு உறுதி செய்யவில்லை.
இதற்கிடையில் ரஷ்யா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை மார்ச் 16 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai