தமிழக அரசு நீட் தேர்வை ஒருபோதும் ஏற்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்தில் இருந்து இந்த ஆண்டு விலக்கு பெற தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்காக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெறுவது என்பது நடைபெறாமல் போய்விட்டது.
இந்நிலையில் மருத்துவப் படிப்பில் சேர இயலாமல் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தம்பிதுரை மாணவியின் மரணம் வேதனை அளிப்பதாகவும், இனிமேல் எந்த மாணவரும் இதுபோன்று முடிவெடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, நீட் தேர்வை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!