முதுமலையில் மழை வேண்டி பாரம்பரிய திருவிழாவை குறும்பர் பழங்குடியினர் நடத்தினர். தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி அவர்கள் குல தெய்வத்தை வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் வசித்து வருபவர்கள் குறும்பர் பழங்குடியின மக்கள். இவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாத காலமாக மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கடும் வறட்சி காரணமாக விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இந்த பழங்குடி மக்களால் சரியான முறையில் விவசாயம் செய்ய முடியவில்லை.
இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் ஆற்றை ஒட்டியுள்ள குறும்பர் பழங்குடியின மக்களின் குலதெய்வமான ஸ்ரீ பொம்ம தேவர் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடத்தினர். அப்போது குறும்பர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக நடனமாடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix