நீட் தேர்வுக்கு ஆதரவாக வேலூரில் மாணவர் ஒருவரின் தாயார் தற்கொலை செய்துகொண்டபோது எதிர்க்கட்சிகள் அமைதி காத்தது ஏன் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மாணவி அனிதாவின் முடிவு வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் கல்வி பயின்று விவசாயிகளுக்கு உதவப்போவதாக கூறிய மாணவி எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும் என்றும் ஹெ.ச்.ராஜா வினவியுள்ளார்.
அதே நேரத்தில் அநாகரீகமான மற்றும் நியாயமற்ற முறையில் பாஜகவை, திமுக விமர்சிப்பது, செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 2ஜி வழக்கு தீர்ப்பு தேதிக்கு அக்கட்சி ஒத்திகை பார்ப்பதுபோல் உள்ளதாக ஹெச்.ராஜா சாடியுள்ளார்.
நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்ற அச்சத்தில் வேலூர் மாணவர் ஒருவரின் தாயார் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டபோது எதிர்க்கட்சிகள் எங்கு சென்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயக்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் பாரதிய ஜனதா தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்