திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மனவேதனை அளிக்கிறது. கனவுடன் வாழ்ந்த அனிதாவை மண்ணுடன் புதைத்துவிட்டனர். திருமாவளவன் உள்ளிட்டோர் வெகுண்டெழ வேண்டும். மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால் நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். இதுபோன்ற துயரம் இனி நிகழக்கூடாது. நீட்டுக்கு எதிராக பேச வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி வாழ்வார்கள். தமிழக அரசியல் நிலவரம் மிக வேடிக்கையாக உள்ளது. எந்த பக்கமும் நான் சாய மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், “அனிதா என்னுடைய மகள். அவளுக்காக நான் குரல் கொடுப்பேன். இந்த மாதிரி தற்கொலை இனியும் தொடர்ந்தால்தான் உங்களால் பாடம் கற்க முடியும் என்றால், வேண்டாம் நாங்களே கற்றுக் கொள்கிறோம். கற்றுக் கொடுக்கிறோம். மனம் தளரக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அவர்களுக்கு போராட்டத்திற்கு நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மக்கள்தான் இறங்க வேண்டும். வேண்டுமென்றால் தமிழக அரசும் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். கட்சி, ஜாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரும் நீதிக்காக போராட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாட வேண்டும். தமிழக அரசு சரியாக வாதடவில்லை என்றே தெரிகிறது. நான் வழக்கறிஞரின் மகன்” என்று கமல் கூறினார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்