பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் புதுச்சேரியில் பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுகோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவருக்கு இரண்டு மகன்கள், இவரது இரண்டாவது மகன் பிரவின் டேனியல் (வயது 31), புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பட்ட ஆராய்ச்சி மேற் படிப்பு படித்து வருகிறார், கூடுதலாக பங்கு சந்தை முதலீட்டு தொழிலும் செய்து வந்துள்ளார் இந்நிலையில், நேற்று மாலை பிரவின் பிள்ளைசாவடியில் தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காலாபட்டு போலிசார் பிரவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் பங்கு சந்தை தொழிலில் 10 லட்ச ரூபாய்க்கு மேலாக அவர் நஷ்டம் அடைந்துள்ளதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் அவர் தற்கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**********
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல.
தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக அதற்கான உதவி எண்களை நாட தயங்க வேண்டாம் - மாநில சுகாதாரத் துறை தற்கொலை உதவி எண் - 104.
சமீபத்திய செய்தி: கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai