"ஹிட்லருக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்" - புடினை எச்சரித்த உக்ரைன்

"ஹிட்லருக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்" - புடினை எச்சரித்த உக்ரைன்
"ஹிட்லருக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்" - புடினை எச்சரித்த உக்ரைன்

தோற்கடிக்கப்பட்ட ஹிட்லரைபோல புடினையும் வீழ்த்துவோம் என ரஷ்யாவுக்கு எதிராக போர்புரிய வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது

வெளிநாட்டிலிருந்து வரும் தன்னார்வலர்களுக்காக உக்ரைன் ஒரு வெளிநாட்டு "சர்வதேச படையணி"யை நிறுவுகிறது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தெரிவித்தார். "எங்கள் நாட்டிற்காக நீங்கள் அளிக்கும் ஆதரவின் முக்கிய அம்சமாக இது இருக்கும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சூழலில், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச தன்னார்வ இராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள உக்ரைனின் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக டிமிட்ரோ குலேபா வெளியிட்டுள்ள ட்வீட்டில் , "உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணியின் ஒரு பகுதியாக உக்ரைன் மற்றும் உலக ஒழுங்கை பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டினர், உங்கள் நாட்டில் உள்ள உக்ரைனின் வெளிநாட்டு தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். நாம் ஒன்றாக இருந்து ஹிட்லரை தோற்கடித்தோம், புடினையும் தோற்கடிப்போம்" என தெரிவித்துள்ளார்

இந்த ட்வீட் உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com