புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியைக்கு மாணாக்கர்களும் சக அசிரியர்களும் கண்கள் பனிக்க பிரியாவிடை கொடுத்தனர்.
விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றியவர் ஜெனிட்டா. மாணாக்கர்களிடம் கனிவாக நடந்து கொள்வதோடு, அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். ஆசிரியை ஜெனிட்டாவுக்கு பதவி உயர்வும் பணியிட மாற்றமும் கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பிரியாவிடை கொடுக்கும்விதமாக பள்ளியில் நடந்த விழாவில், மாணாக்கர்களின் பெற்றோரும் சக ஆசிரியர்களும் ஜெனிட்டாவுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் அவரைப் பிரியும் கவலையில் கண்ணீர் விட்டு கலங்கினர். சில பிள்ளைகள் ஜெனிட்டா டீச்சரை பிரிய மனமின்றி வாய்விட்டு அழுதது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்