மாமல்லபுரம் அருகே நடந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இதில் கன்னட நடிகர்கள் படுகாயமடைந்தனர்.
சுதீப், ராகிணி திவிவேதி, ரவிசங்கர் நடித்து கன்னடத்தில் வெளியான படம், ’கெம்பே கவுடா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதை சங்கரே கவுடா தயாரித்து இயக்கி வருகிறார். இதில் கோமல், யோகிஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது.
நேற்று நடந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. ஒரு பைக்கில் கோமலும், யோகிஷும் செல்லும்போது வில்லன்கள் தாக்குவது போல காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக 11 முறை ரிகர்சல் பார்க்கப்பட்டது. பின்னர் ஷாட் ரெடியானது. ஆனால், 12 வது முறை எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கோமலும் யோகிஷும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி இயக்குனர் சங்கரே கவுடா கூறும்போது, ’தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது. இப்போது இரண்டு பேரும் நலமாக உள்ளனர்’ என்றார்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்