எந்திரத்தில் கோளாறு - முசிறியில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

எந்திரத்தில் கோளாறு - முசிறியில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு
எந்திரத்தில் கோளாறு - முசிறியில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

முசிறி நகராட்சி வார்டு எண் 1 பெண்கள் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு ஒருமணி நேரம் 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் 1வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடி மையம் கீழச்சந்த பாளையம் மாரியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ளது. இங்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் கண்ட்ரோல் யூனிட்டில் தேதி தவறுதலாக வந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையர் மனோகரன் தலைமையில் வேறு வாக்குப்பதிவு எந்திரம் எடுத்து வரப்பட்டு கட்சியின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

பின்னர் வாக்குப்பதிவு துவங்கியது. இதன் காரணமாக. வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக துவங்கியுள்ளது. இதன் காரணமாக பெண்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருக்கின்றனர். நடக்கமுடியாத ஒரு மூதாட்டி வீல்சேரில் வந்து வாக்களித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com