சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ டீசர் வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது, டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ என்பதை டீசர் முழுக்க வரும் ஆக்ஷன் காட்சிகள் உணர்த்துகின்றன.
ஏற்கனவே, படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்று தகவல் வெளியானது. அதனை நிரூபிக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. வில்லன் இன்பாவாக வினய் கவனம் ஈர்க்கிறார். பெண்ணைக் காப்பாற்றி ‘என்கூட இருக்கவங்க எப்பவும் பயப்படக்கூடாது. நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சூர்யா பேசும் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்