மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா (Rewa) மாவட்டத்தில் அமைந்துள்ள மங்கவான் மேம்பாலத்திற்கு அருகே கிடைத்த கடிதத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில தேர்தல் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 30-இல் முதலில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்த தகவல் பரவியிருந்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சந்தேகத்திற்கு இடமான பொருள் குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டதில் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. இருந்தாலும் அந்த இடத்தில் அடையாளம் தெரியாத நபர் யாரோ எழுதிய கடிதம் மட்டுமே பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளது. அதில் யோகி ஆதித்யநாத் மற்றும் 2022 உத்தரப்பிரதேச தேர்தல் என கையால் எழுதப்பட்டுள்ளது. இதனை அந்த மாவட்டத்தின் ஐ.ஜி வெங்கடேஸ்வரா ராவ் உறுதி செய்துள்ளார்.
கடைசியாக இந்தியாவில் கடந்த 14-ஆம் தேதி அன்று டெல்லி மற்றும் பஞ்சாப் (இந்தியா - பாகிஸ்தான் எல்லை) பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் இருந்தன. அந்த இரண்டிலும் பாதுகாப்பு படையினர் வெடிபொருட்களை அடையாளம் கண்டு அசம்பாவிதங்களை தவிர்த்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி