கடலில் நீச்சல் அடித்து 19 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி உலக சாதனை படைத்தார்.
சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தருண்ஶ்ரீ தம்பதியினரின் 8 வயது மகள் தாரகை ஆராதனா. இவர், கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கோவளம் கரிகாட்டுக் குப்பம் முதல் நீலாங்ரை வரை உள்ள 19 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
இந்த தூரத்தை 6 மணிநேரம், 14 நிமிடங்களில் நீந்தி வந்த சாதனையை அசிஸ்ட் வோல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. சான்றிதழை விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார். 2ஆம் வகுப்பில் படிக்கும் இந்த சிறுமி, கடந்த 3 வருடங்களாக கடும் பயிற்சி எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடலிலும், கடற்கரையிலும் அதிகப்படியாக இருந்த 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைத்துள்ள இவர், அதை விற்று கிடைக்கும் பணத்தை முதல்வர் ஸ்டாலின் தாத்தாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!