கோவா தேர்தலில் வெற்றிபெற்ற பின் கட்சிமாற மாட்டோம் என்று தங்கள் கட்சி வேட்பாளர்களிடம் காங்கிரஸ் கட்சி உறுதிமொழி வாங்கியுள்ளது.
கோவா சட்டப்பேரவைக்கு கடந்தமுறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால் இவர்களில் பலர் அடுத்தடுத்து காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிவிட்டனர். இதனால் ஆட்சியையும் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் தரப்பில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த முறையும் இந்த நிலை ஏற்படக் கூடாது என திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகம், தமது சார்பில் களமிறங்கும் 34 வேட்பாளர்களையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று கட்சிமாற மாட்டோம் என கடவுள் சிலை முன் உறுதிமொழி வாங்கியுள்ளது.
மேலும் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் இஸ்லாமிய தர்காவுக்கும் அழைத்து சென்று வேட்பாளர்களிடம் உறுதிமொழி பெறப்பட்டது. இந்நிகழ்வின் போது காங்கிரஸ் சார்பில் கோவா தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரமும் உடன் சென்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அதன் எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாற மாட்டார்கள் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் அதற்காகவே வேட்பாளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்கும் முடிவுக்கு வந்ததாகவும் கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கிரிஷ் சோதான்கர் தெரிவித்துள்ளார். கோவாவில் வேறு கட்சிக்கு மாற மாட்டோம் என தமது வேட்பாளர்களிடம் கட்சிகள் சத்தியம் வாங்குவது புதிதல்ல என்பதும் ஏற்கனெவே இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி