உடுமலை அருகே 16 வயது சிறுமி தனது 7 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் காதலன் கைது செய்யப்பட்டார்.
மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கிராமத்தைச் சேர்ந்த 16 சிறுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இது காதலாக மாறிய நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காதலன் பொன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சிறுமி கோவையில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். மேலும் காதலன் பொன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்து காரத்தொழுவில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சிறுமி தனது 7 மாத குழந்தையுடன் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து காப்பாற்றி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதற்கிடையே தகவல் கிடைத்ததும் பொன்ராஜை கைது செய்த கணியூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'