பேரறிவாளனின் சிகிச்சைக்காக மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன் சுமார் 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒருமாத பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
முதல் முறை பரோல் முடிந்து சிறைக்கு செல்லும் நிலையில், அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக மேலும் முப்பது நாட்கள் அவருக்கு பரோல் விடுப்பு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்பு மீண்டும் சிறைக்குச் சென்ற பேரறிவாளன், கடந்த 2019 நவம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் அவரது உடல் நலம் மற்றும் அவரது சகோதரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவரது சிறுநீரக நோய் தொற்று சிகிச்சைகாக 2020 அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக ஒருமாத பரோல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தன்னுடைய மகனின் உடல்நிலை சிகிச்சைக்காக 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். அதன் பேரில் கடந்த மே மாதம் 28ஆம் ஆம் தேதி ஒருமாத பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.
இந்த பரோல் நாளையுடன் முடிவுற இருந்த நிலையில், எட்டாவது முறையாக மீண்டும் பேரறிவாளனின் உடல்நல குறைபாட்டின் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்